தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் நேற்று கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றுப்பரவல் அதிகரித்து வரும் நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார். கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும், விழிப்புணர்வு பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து அறிவுறுத்தல் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்று எண்ணிக்கை மேலும் அதிக அளவில் அதிகரித்தால் கொரோனா சிகிச்சை மையங்களை தயார் நிலையில் வைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். தொற்று பாதிப்பு தற்போது உயர்ந்தாலும், நோயின் தாக்கம் குறைவாக இருப்பதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு தமிழகத்தில் கொரோனா மீண்டும் தீவிரம் காட்ட தொடங்கியுள்ள நிலையில் ஜூலை பத்தாம் தேதி முதல் மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்டர் தடுப்பூசி செலுத்தவில்லை என்றால் கொரோனாவுக்கு எதிரான எதிர்பாற்றல் குறைந்துவிடும் என்று கூறிய அமைச்சர் மா சுப்பிரமணியன் தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பூசி செலுத்துமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.