Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

தீவிர ரோந்து பணியின் போது…. வசமாக சிக்கிய 2 பேர்…. போலீஸ் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தூத்துக்குடி பொன்னகரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் 2 பேர் நின்று கொண்டிருந்தனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்கள் இருவரையும் மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில் அவர்கள் சாமுவேல்புரம் பகுதியில் வசிக்கும் கோபிகண்ணன், சுடலைமாடசாமி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்ததும் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடம் இருந்த 100 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Categories

Tech |