Categories
மாநில செய்திகள்

தமிழக முழுவதும் பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. அவ்வகையில் அரசு பள்ளிகளில் தலைமை பணியிடங்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு தேதிகளை பள்ளி கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 12ஆம் தேதியும், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வு வருகின்ற ஜூலை 13ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இடைநிலை ஆசிரியர்கள், சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு வருகின்ற ஜூலை 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

Categories

Tech |