Categories
பல்சுவை

காலை….. மாலை….. ”மகிழ்ச்சி கொடுத்த தங்கம்”… துள்ளிகுதிக்கும் மக்கள் ….!!

இன்று தங்கம் காலை , மாலை என விலை குறைந்துள்ளதால் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது. தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது. தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.

தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் சில நாட்களாக குறைந்தது முன்னதாக 31 ஆயிரம் ரூபாயை தாண்டிய தங்கம் மீண்டும் குறைந்தது. இந்நிலையில் இன்று காலை சரிந்த தனத்தின் விலைவாடிக்கையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்தது.

காலை மகிழ்ச்சியை ஏற்படுத்திய விலை குறைவு மாலையும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்று வாடிக்கையாளர்கள் நினைத்திருக்க மாட்டார்கள். மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 224 குறைந்து ரூ 31,152க்கும், ஒரு கிராம் ரூ 38 குறைந்து 3,894 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது. அதே போல வெள்ளி ஒரு கிராம் ரூ90 காசு குறைந்து 49.50க்கு விற்பனை ஆகின்றது. காலை மாலை என மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள தங்கத்தின் விலை அவர்களை நகைக்கடை நோக்கி செல்ல வைக்கின்றது.

Categories

Tech |