Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிளில் சென்ற சகோதரர்கள்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

2  மோட்டார் சைக்கிள்கள் மோதி கொண்ட விபத்தில் அண்ணன் மற்றும் தம்பி படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள முத்தையாபுரம் பகுதியில் சையது முகமது என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு மூன்று மகன் உள்ளனர். இந்நிலையில் இவரது மூன்றாவது மகனான ரசூல்கான் தனது அண்ணனான மாலிக் பாட்ஷாவுடன் முத்தையாபுரம் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி  இவர்களின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் ரசூல்கான், மாலிக் பாட்ஷா ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு  சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |