உலகிலேயே நம்பர் 1 கோடீஸ்வரராகவுள்ள எலான் மஸ்க்கிற்கு சொந்தமாகிய டெஸ்லா நிறுவனமானது, மின்சார கார் உற்பத்தியில் முன்னனி நிறுவனமாக விளங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் சில தொழிற்சாலைகள் நஷ்டத்தில் செயல்பட்டு வருவதாக அண்மையில் எலான்மஸ்க் தெரிவித்து இருந்தார். அமெரிக்க நாட்டில் 8.6 % விலைவாசி உயர்வு ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அங்கு பொருளாதார வீழ்ச்சி ஏற்பட வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் டெஸ்லா நிறுவனத்தில் தானியங்கி முறையில் ஓட்டுனர் இன்றி இயங்கும் கார் தயாரிப்பு பிரிவில் ஒரு அலுவலகம் மூடப்பட்டு உள்ளது. கலிபோர்னியாவின் சான்மேட்டியோ நகரிலுள்ள டெஸ்லா நிறுவனத்தின் கிளை அலுவலகம் மூடப்பட்டு, அவற்றில் பணியாற்றிய சுமார் 200 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். அடுத்த 3 மாதங்களில் தன் நிறுவனத்தில் 10 % ஆட்குறைப்பு செய்யப்போவதாக எலான்மஸ்க் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.