Categories
மாநில செய்திகள்

முதுமலை: வாகனங்களுக்கு வழிவிட்ட கரடி…. வியந்து போன டிரைவர்கள்…..!!!!

முது மலை புலிகள் காப்பகத்தில் காட்டுயானை, மான், புலி ஆகிய வனவிலங்குகள் வாழ்ந்து வருகிறது. இந்த காப்பகத்துக்கு உட்பட்ட பகுதியில் கூடலூரிலிருந்து மைசூரு போகும் தேசிய நெடுஞ்சாலையும், மசினகுடிக்கு செல்லும் சாலையும் இருக்கிறது. இதன் காரணமாக வாகனங்கள் அதிகமாக இயக்கப்படுகிறது. இந்நிலையில் நேற்று கூடலூரிலிருந்து மைசூருக்கு வாகனங்கள் முதுமலை புலிகள் காப்பகம் வழியே வழக்கம்போல சென்றது. இந்நிலையில் கார்குடி பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் கரடி ஒன்று எவ்வித பதட்டமும் இன்றி நடந்து சென்றது.

இதையடுத்து சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்களை ஓட்டியபடி டிரைவர்கள் அவ்வழியாக வந்து கொண்டிருந்தனர். இதனிடையில் சாலையின் நடுவே கரடி நடந்து சென்றதால் பலர் வாகனங்களின் வேகத்தை குறைத்து மெதுவாக சென்றனர். இதனைக் கண்ட கரடி சாலையின் எதிர்புறம் ஒதுங்கி நின்றது. அப்போது டிரைவர்கள் தங்களுடைய வாகனங்களை வேகமாக ஓட்டியபடி கரடியை கடந்து சென்றனர். அதுவரையிலும் கரடி சாலையோரம் பொறுமையாக நின்று வாகனங்களை பார்த்து கொண்டிருந்தது. அதன்பின் ஒன்றன்பின் ஒன்றாக வாகனங்கள் சென்றது. அதனை தொடர்ந்து கரையோரம் நின்றிருந்த கரடி மீண்டுமாக சாலைக்கு வந்து நடந்து சென்றது. இதனை பார்த்த வாகன டிரைவர்கள் ஆச்சரியமடைந்தனர்.

Categories

Tech |