தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப் பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு மாவட்டத்தில் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி மதுரையில் இன்று முதல் பொது இடங்களில் முக கவசம் அணியாமல் சுற்று ஒரு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மதுரையில் இன்று முதல் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.