கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சிங்கம்பாறையில் ஞானசெல்வன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஜாக்சன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாமாண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் அரியநாயகிபுரம் அணைக்கட்டு அருகில் ஜாக்சன் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜாக்சன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஜாக்சன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.