Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இங்கு எதுக்கு வந்தீங்க?…. வசமாக சிக்கிய 3 பேர்…. அபராதம் விதித்த வனத்துறையினர்….!!!!

இரவு நேரத்தில் சுற்றுலா பயணிகளை அழைத்து வந்த 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள கழுகுமலை பகுதியில் நேற்று இரவு  வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியாக வனவிலங்கு பாதுகாப்பு சட்டத்திற்கு எதிராக 3  பேர் தங்களது வாகனங்களில் சுற்றுலா பயணிகளை சவாரிக்கு அழைத்து வந்தது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த வனத் துறையினர் அவர்களை அங்கிருந்து செல்லும்படி எச்சரித்து விட்டு சென்றுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்கவில்லை இதனையடுத்து மீண்டும் வனத்துறையினர் அப்பகுதிக்கு சோதனை செய்ய வந்துள்ளனர்.

அப்போது அவர்கள் அங்கு நின்று வனவிலங்குகளை புகைப்படம் எடுத்துள்ளனர். இதனையடுத்து காவல்துறையினர் கலையரசன், ஜீவா உள்ளிட்ட 2 பேரை கைது செய்துள்ளனர். மேலும் அவர்களது வாகனங்களை பறிமுதல் செய்து 70 ஆயிரம்  ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Categories

Tech |