Categories
மாநில செய்திகள்

தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு வசூல்படி….. அரசு டபுள் ஜாக்பாட் அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகளுக்கு கட்டணமில்லா டிக்கெட் வழங்கப்படுகிறது. இதனால் பெண்கள் பயனடைந்து வருகின்றனர். இது போன்ற பெண்களுக்கான திட்டத்தை திமுக அரசு செயல்படுத்தி வருவதால் பெண்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் இது போன்ற இலவச பேருந்து திட்டத்தால் அரசுக்கு பல கோடி நஷ்டம் ஏற்படுவதாக அரசு சார்பாக தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் இந்த திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

இதனிடையே தமிழக அரசு பேருந்துகளில் தங்களுக்கு கிடைக்கும் பேட்டா தொகை குறைந்துள்ளதாக ஓட்டுனர்கள் வருத்தம் தெரிவித்தனர். இந்த நிலையில் சாதாரண கட்டண பேருந்துகளின் ஓட்டுநர், நடத்துனர்களுக்கு வசூல்படி இரட்டிப்பாக வழங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துதுள்ளார்.

Categories

Tech |