Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

திடீரென பிரேக் பிடித்த பேருந்து ஓட்டுநர்…. சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து டேங்கர் லாரி ஒன்று மதுரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை காளீஸ்வரன்(24) என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சேதுராஜபுரம் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது திடீரென முன்னால் சென்ற தனியார் பேருந்து ஓட்டுநர் பிரேக் பிடித்துள்ளார். அப்போது பேருந்து மீது மோதாமல் இருப்பதற்காக காளீஸ்வரன் லாரியை திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி பாலத்தின் நடுவே இருக்கும் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் காளீஸ்வரன் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தினால் அப்பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் உதவியுடன் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |