Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

கிடு கிடுவென உயர்ந்த உளுந்தம் பருப்பு…. அதிர்ச்சியில் இல்லத்தரசிகள்….!!!

உளுந்து விலை அதிகரித்ததால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

விருதுநகரில் வாரம் தோறும் அத்தியாவசிய பொருட்களின் விலைப்பட்டியலானது வெளியிடப்படும். அந்த வகையில் இந்த வாரமும் விலை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த வாரத்தை விட உளுந்தம் பருப்பின் விலை அதிக அளவில் உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். இதனையடுத்து அதிகரித்துள்ள பொருட்களின் விலைப்பட்டியல் குறித்து பார்க்கலாம்.

அதன்படி பட்டாணி பருப்பின் விலை 5,750 ரூபாய்க்கும், பர்மா எப்.ஏ.கியூ உருட்டு உளுந்தம் பருப்பு 9,100 ரூபாய்க்கும், உருட்டு உளுந்தம் பருப்பு 10,200 ரூபாய்க்கும், நாட்டு உளுந்து 7,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்பிறகு லயன் உளுந்து 7,800 ரூபாய்க்கும், பாமாயில் (15 கி டின்) 130 ரூபாய் குறைந்து 1260 ரூபாய்க்கும், கடலை எண்ணெய் (15 கி டின்) 2,850 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் உளுந்தம் பருப்பின் விலை அதிகரித்து வரும் நிலையில், எண்ணெய் விலையானது தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

Categories

Tech |