என்ஜினியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிள்ளைகொத்தூர் பகுதியில் இருக்கும் கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபரின் சடலம் மிதந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த வாலிபரின் உடலை மீட்டு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக கிடந்த வாலிபர் செட்டிபள்ளி பகுதியை சேர்ந்த என்ஜினீயரான கிருஷ்ணன் என்பது தெரியவந்தது. நீண்ட நாட்களாக கிருஷ்ணன் வேலை தேடி வந்துள்ளார். ஆனால் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் கிருஷ்ணன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.