Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கல்லூரிப் பேராசிரியரை அரிவாளால் வெட்ட வந்த சைக்கோ…. எதற்கு தெரியுமா?….. பெரும் பரபரப்பு சம்பவம்…!!!

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகிலுள்ள தெள்ளந்தி பகுதியில் அஜிதா என்பவர் வசித்துவருகிறார். இவர் ஆரல்வாய்மொழி பகுதியில் தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்த கூலித் தொழிலாளியான அஜித், அஜிதாவை கடந்த சில தினங்களாக பின்தொடர்ந்து வந்துள்ளார். இதனால் பிரச்சினை ஏற்பட்டு அஜிதாவின் கணவர் கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே முன்விரோதம் காணப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று நள்ளிரவில் மது போதையில் சுற்றித்திரிந்த அஜித் கையில் வைத்திருந்த அரிவாளை கொண்டு, தன் வீட்டின் முன் நின்று கொண்டிருந்த அஜிதாவை தாக்க முயன்றுள்ளார். இதில் நிலைகுலைந்த அஜிதா வீட்டிற்குள் தப்பி சென்று உயிர் பிழைத்தார். இந்த சம்பவம் குறித்து பூதப்பாண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனையடுத்து தலைமறைவாகியுள்ள அஜித்தை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இது குறித்து சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |