நார்வேயில் இரவு நேர கேளிக்கை விடுதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
நார்வே நாட்டில் ஓஸ்லோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்த கேளிக்கை விடுதியில் இன்று நடந்த நிகழ்ச்சிகளில் வாடிக்கையாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர். இந்நிலையில் கேளிக்கை விடுதிக்குள் மர்ம நபர் நுழைந்து திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் கேளிக்கை விடுதியிலிருந்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பியோடிய மர்மநபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கைது செய்யப்பட்ட நபரின் விவரம் குறித்த எந்த தகவலையும் காவல்துறையினர் வெளியிடவில்லை. எனவே இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.