வங்காளதேசத்திற்கு இந்தியா வாழ்த்து தெரிவித்துள்ளது.
வங்காளதேசத்தில் பத்மா நதி ஓடுகிறது. இந்த நதியில் 6.15 கிலோமீட்டர் தொலைவில் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது 19 தென் மேற்கு மாவட்டங்களை இணைக்கும் விதமாக அமைந்துள்ளது. இந்த பாலத்தில் சாலை மற்றும் ரயில் என 4 வழிப் போக்குவரத்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இந்த பாலத்தை வங்காள தேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைக்கிறார்.
இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து கடன் வாங்காமல் முற்றிலும் உள்நாட்டு நிதி உதவியை வைத்து மட்டுமே பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலமானது அந்த நாட்டின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும் என கருதப்படுகிறது. இந்த பாலத்தை வெற்றிகரமாக வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா கட்டி முடித்துள்ளார். இதன் காரணமாக இந்தியா வங்காள தேசத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.