Categories
உலக செய்திகள்

“சூப்பர் வரி”…. பொருளாதார நெருக்கடியை சமாளிக்க…. பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பின் அதிரடி அறிவிப்பு….!!

பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான  பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கித் தவிக்கின்றனர். 

பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடியால் மக்கள் சிக்கித் தவித்து வருகின்றனர். அந்நாட்டின் அன்னிய செலவாணி கையிருப்பு குறைந்து கொண்டே வருகின்றது. இங்கு பணவீக்கமும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் நாடு திவாலாவதை தடுக்கவும், பொருளாதார நெருக்கடியை சமாளிக்கவும் சிமெண்டு, இரும்பு மற்றும் ஆட்டோமொபைல் போன்ற பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % ‘சூப்பர் வரி’ விதிக்கப்படுவதாக அந்நாட்டின் பிரதமரான ஷபாஸ் ஷெரீப் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது, “எங்கள் முதல் நோக்கம் வெகுஜனங்களுக்கு நிவாரணம் வழங்குவதும், மக்கள் மீதான பணவீக்க சுமையை குறைத்து அவர்களுக்கு வசதியை செய்து கொடுப்பதுமாகும். எங்கள் இரண்டாவது நோக்கம் திவாலாகிவிடாமல் நாட்டைப் பாதுகாப்பதாகும். அதன் ஒரு பகுதியாக நாட்டில் பெரிய அளவிலான தொழில்களுக்கு 10 % ‘சூப்பர் வரி’ விதிக்கப்படுகின்றது. மேலும்  பொருளாதாரத்தை பலப்படுத்துவது போன்ற பிற நோக்கங்களும் அடங்கும்” என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |