மின்சாரம் தாக்கி முதியவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆட்டையம்பாளையம் கிராமத்தில் கூலித் தொழிலாளியான முத்துசாமி(72) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வீட்டில் இருந்த மின்சார சுவிட்சை ஆன் செய்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக முத்துசாமியை மின்சாரம் தாக்கியது. இதனால் படுதாயமடைந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முத்துசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.