Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

இங்கு வாகனங்களை நிறுத்தக்கூடாது…. பொது மக்களின் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!!!

பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த  பகுதி சாலையில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக சிலர் வேன், கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றை நிறுத்தி வருகின்றனர். இதனால்  அப்பகுதியில்  கடை நடத்திவரும் சில்லரை வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் பல முறை மனு அளித்து விட்டனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள்   போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |