Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“சென்னையில் தொடரும் செல்போன் பறிப்பு”… 16 வயது சிறுமியும் சிக்கினார்… வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

சென்னை கோபாலபுரம் ஆழ்வார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதுதொடர்பாக ராயப்பேட்டை அபிராமபுரம் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. செல்போன் பறிப்பு கும்பலை பிடிப்பதற்காக இராயப்பேட்டை உதவி கமிஷனர் சார்லஸ் சாங் துரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தனிப்படை போலீசார் செல்போன் பறிப்பு நடைபெற்ற இடங்கள் மற்றும் குற்றவாளிகள் தப்பி சென்ற வழியில் உள்ள 42 கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்தும் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த 4 வாலிபர்கள் 16 வயது சிறுமியை கைது செய்துள்ளனர்.

மேலும் விசாரணையில் அவர்கள் தேனாம்பேட்டை சேர்ந்த விவேக் என்ற குள்ளா(26), ஜெகன் (25), கடலூர் மாவட்டம் சிதம்பரத்தை சேர்ந்த ஜெகதீசன் (25) தூத்துக்குடியை சேர்ந்த சரவணபெருமாள் (19) என்பதும் இந்த செல்போன் வழிப்பறி க்கு மூளையாக செயல்பட்டது 16 வயது சிறுமி என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த வாலிபர்களும் சிறுமியும் சமூக வலைதளம் மூலமாக அறிமுகமாகி இருக்கின்றனர். அதன்பின் ஆடம்பரமாகவும் உல்லாசமாக ஊர் சுற்றுவதற்காகவும்  இவர்கள் ராயப்பேட்டை, அபிராமபுரம், ஆயிரம் விளக்கு, கிண்டி, கோட்டூர் புரம், வேளச்சேரி, எழும்பூர், நுங்கம்பாக்கம், அண்ணா சாலை போன்ற போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட இடங்களில் 16 செல்போன் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு இருப்பது தெரியவந்தது. அதன்பின் சிறுமிகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

Categories

Tech |