இந்திய வெளியுறவு செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் நேற்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே போன்றோரை சந்தித்துப் பேசினார். அப்போது தீவு நாடான இலங்கையின் பொருளாதாரம் முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வரலாறு காண முடியாத அளவில் நெருக்கடியில் சிக்கித் தவித்த இலங்கைக்கு இந்தியா தொடர்ந்து உதவிசெய்து வருகிறது. பல்லாயிரம் கோடி ரூபாய் நிதி கடனுதவியை வழங்கியுள்ள இந்தியா உணவு பொருட்கள், எரி பொருட்கள், மருந்துகள் என நிவாரணப் பொருட்களையும் அனுப்பி வருகின்றது.
மேலும் இந்தியாவின் இந்த உதவி நடவடிக்கைகளில் தமிழகமும் இணைந்து இருக்கின்றது. இந்த நிலையில் இலங்கையின் பொருளாதார நிலவரம் போன்றவை பற்றி ஆய்வு மேற்கொள்வதற்காக இந்திய உயர்மட்ட குழு ஒன்று நேற்று கொழும்பு சென்றது. மத்திய வெளியுறவு செயலாளர் தலைமையிலான இந்தக் குழுவில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறை செயலாளர் அஜித் சேத் தலைமை பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன் வெளியுறவுத் துறையின் இந்திய பெருங்கடல் பிராந்திய இணை செயலாளர் கார்த்திக் பாண்டி போன்றோரிடம் பெற்றிருந்தன. மேலும் இந்த குழுவினர் கொழும்புவில் அதிபர் கோத்தபய ராஜபக்சேவை சந்தித்து நாட்டின் பொருளாதார மீட்பு நடவடிக்கைகள் பற்றி ஆலோசனை மேற்கொண்டனர். அப்போது அவரிடம் இந்த சிக்கலான சூழலில் இருந்து இலங்கை மீண்டு வருவதற்காக ஒரு நெருங்கிய நண்பனாக முழு ஆதரவையும் இந்தியா வழங்கும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக முதலீடுகளை அதிகரித்தல் இணைப்பு மற்றும் பொருளாதார இழப்பை வலுப்படுத்துதல் மூலமாக விரைவான பொருளாதார மீட்சி இந்தியா உதவும் என எடுத்துரைத்துள்ளார். முன்னதாக எரிபொருள் மருந்துகள் உரம் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை ஏற்கனவே இந்தியா வழங்கி வரும் உதவிகள் பற்றியும் ஆய்வு செய்த இந்திய குழுவினர் மேலும் உதவிகளை வழங்க இந்தியா உறுதி அளித்துள்ளதாக அறிவித்துள்ளனர். இதன்பின் இந்த குழுவினர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் சந்தித்து நாட்டின் பொருளாதார நெருக்கடி உணவு அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு பற்றியும் இந்தியா வழங்கி வரும் உதவிகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த சந்திப்புகள் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தனது ட்விட்டர் பக்கத்தில் இலங்கையின் தற்போதைய நிலைமை மற்றும் இந்தியாவின் உதவிகள் பற்றி அந்த நாட்டு அதிபர் மற்றும் பிரதமருடன் இந்திய குழுவினர் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்தியுள்ளனர் என தெரிவித்துள்ளார். இதற்கிடையே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் மேலும் பெறும் வகையில் இந்தியா சீனா ஜப்பான் போன்ற நாடுகளில் நன்கொடையாளர் மாநாட்டை நடத்த இருப்பதாக அந்த நாட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். மேலும் வரலாற்று நட்பு நாடுகளாக இருந்து வரும் இந்த நாடுகளின் ஆதரவு தங்களுக்கு தேவை எனவும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.