ஆட்டுக்கறியில் மருத்துவ குணங்களா..? ஆமாங்க..
நாம் சாப்பிடும் ஆட்டுக்கறியில் எவ்வளவு மருத்துவ குணங்கள் இருக்கின்றது, என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள்:
ஆட்டுக்கறியில் சிறப்பான மருத்துவ நன்மைகள் இருக்கிறது. இவை சாப்பிடுவதால் வாயு, அஜீரணம் உண்டாகும், அதனால் தான் நாம் சமைக்கும் பொழுது உணவில் சீரகம், மிளகு சேர்த்து கொள்கிறோம்.
ஆட்டின் தலை:
நம்முடைய இதயம் சம்மந்தமான பிரச்சனையை தீர்க்கும், குடலை பலம் ஆக்கும், கபால பிரச்சனையும் தீர்த்து விடும்.
கழுத்துக்கறி:
கழுத்து கறியில் கொழுப்பு இருக்காது, இந்த கறியை வயதானவர்களும், குழந்தைகளும் சாப்பிடுவதற்கு ஏற்றதாக இருக்கும், ஏன் என்றால் அந்த கறி சுவையாகவும், மென்மையாகவும் இருக்கும்.
ஆட்டின் கண்:
கண் பார்வை தெளிவாக தெரியும். கண்ணுக்கும் பலம் கொடுக்கும்.
ஆட்டின் மார்பு:
நம்முடைய மார்பகத்தில் புண் ஏதேனும் இருந்தால் அவற்றை ஆற்றிவிடும். மார்பை பலமாக்கும்.
ஆட்டின் இதயம்:
மன தைரியம் உண்டாகும், இதயத்தை பலமாக்கும், மன ஆற்றலை அதிகரிக்கும்.
ஆட்டின் நாக்கு:
உடல் சூட்டை குறைக்கும். உடலின் தோலை பளபளப்பாக்கும், பொலிவுடன் வைக்கும்.
ஆட்டின் மூளை:
புத்தி தெளிவாக சீரடையும், கண்ணை குளிர்ச்சியாக வைத்திருக்கும். நினைவாற்றல் திறம் அதிகமாகும். நம் மூளையின் பாகங்களை பலப்படுத்தும்.
ஆட்டின் நுரையீரல்:
உடலின் வெப்பத்தை ஆற்றிக் குளிர்ச்சியை உண்டாக்கும். நுரையீரலுக்கு மிகுந்த வலு தரும்.
ஆட்டுக் கொழுப்பு:
இடுப்பு வலி குறையும், இடுப்பு எலும்பு உறுதி பெரும், எல்லா வித ரணத்தையும் போக்கிவிடும்.
ஆட்டுக்கொழுப்பு:
அம்மை மற்றும் அக்கி நோய்களுக்கு ஏற்ற தீர்வு.
ஆட்டுக்கால்கள்:
எலும்புக்குப் பலம் தரும். தைரியம் ஏற்படுத்தும். கால்களுக்கு ஆற்றல் தரும்.
ஆட்டுக் குடல்:
நம் குடலில் ஏதேனும் புண் இருந்தால், அதற்கு ஆட்டின் குடல் சமைத்து சாப்பிட்டால் குடல் புண் ஆற்றிவிடும்.