சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் மேகநாதன்(63) என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் காய்கறி கடை நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் மேகநாதன் அதே பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமியை மிரட்டி 6 மாதமாக பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்து கதறி அழுதார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாயார் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மேகநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.