Categories
தேசிய செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகள் நிறைவு…. ரோகித் சர்மா நெகிழ்ச்சி டுவிட்…!!

இந்திய அணியின் மூன்று விதமான கிரிக்கெட் போட்டியிலும் ரோகித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இவருக்கு 34 வயது. 2007 ஆம் ஆண்டு இதே நாளில் அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானார். இந்நிலையில் ரோகித் சர்மா ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக நான் அறிமுகமாகி இன்றுடன் 15 வருடங்களை நிறைவு செய்கிறேன். இந்த பயணம் என் வாழ்வில் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். இந்த பயணத்தில் ஒவ்வொரு பகுதியாக இருந்த அனைவருக்கும் நன்றி. முக்கியமாக இன்று நான் இந்த நிலையில் இருக்க காரணமாயிருந்த வீரர்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் கிரிக்கெட் பிரியர்கள், ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் அன்பும் ஆதரவும் தான் பல்வேறு தடைகளைத் தாண்டி இந்த நிலையில் இருப்பதற்கு காரணமாக இருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |