வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஜாரி கொண்டலாம்பட்டி பகுதியில் பழனிச்சாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோபாலகிருஷ்ணன்(21) என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஜவுளிக் கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கோபாலகிருஷ்ணன் உறவினர் ஒருவருக்கு செல்போனில் குறுந்தகவல் அனுப்பியுள்ளார். அதில் எனக்கு மன நிம்மதி இல்லை. எனவே நான் வாழ விரும்பவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரது வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு கோபாலகிருஷ்ணன் தூக்கு போட்டு மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று கோபாலகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோபாலகிருஷ்ணன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.