பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் தொழிலாளியை கத்தியால் குத்திய வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள திம்மசந்திரம் நேதாஜி நகரில் கிருஷ்ணமூர்த்தி(32) நகரில் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி கூலி தொழிலாளியான மணிகண்டன்(24) என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த மணிகண்டன் கத்தியால் கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த கிருஷ்ணமூர்த்தியை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின்பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.