பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 25 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது. இதனால் அவர் கடந்த 25 நாட்களாக வெளியே வரவில்லை.
மேலும் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரை தொடர்பு கொண்டு கேட்டபோது, முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. இந்நிலையில் சுவாதிக்கு அளித்த சிகிச்சை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது சுவாதிக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மயக்க மருந்துக்குப் பதிலாக முகப்பரு சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் சாலிசிலிக் ஆசிட் செலுத்தப்பட்டது என்று தெரியவந்துள்ளது. இந்த ஆசிட் முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அளிக்கும், எண்ணெய் உற்பத்தியை குறைக்கும் தன்மை கொண்டது. இதனால்தான் சுவாதி முகம் கோரமாக மாறியுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.