Categories
மதுரை மாவட்ட செய்திகள்

தேடி அலைந்த உறவினர்கள்…. மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியின் சடலம் மீட்பு…. போலீஸ் விசாரணை…!!

காணாமல் போன மூதாட்டி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள அலங்காநல்லூர் கிராமத்தில் செல்வி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட மூதாட்டியை அவரது குடும்பத்தினர் பராமரித்து வந்தனர். நேற்று வீட்டிலிருந்து வெளியே சென்ற செல்வி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர்.

அப்போது அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் செல்வி சடலமாக கிடந்ததை பார்த்து குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |