தொழிலாளி தனது மனைவியை அடித்து கொன்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள முஷ்டகிணத்துப்பட்டி தெற்கு காலனியில் ராஜு(52) என்பவர் ரசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு சின்னபொண்ணு(50) என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜு மது குடித்துவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்துள்ளார். கடந்த 18-ஆம் தேதி இரவு ராஜு மதுபோதையில் சின்னப்பொண்ணுவை அடித்து துன்புறுத்தியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்துவிட்டார்.
இதனை அடுத்து அச்சத்தில் ராஜுவும் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார். அவரது சத்தம் கேட்டு விரைந்து சென்ற அக்கம் பக்கத்தினர் உடனடியாக ராஜுவை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.