Categories
மாநில செய்திகள்

“சீனியர் சிட்டிசன்களுக்கு ரிஸ்க் இல்லாத மாத வருமானம்”… வெளியான சூப்பர் திட்டம்….!!!!!!!!

பங்குச்சந்தைகள் சரிந்து வருகின்ற சூழலில் பொதுமக்கள் பாதுகாப்பான ரிஸ்க் இல்லாத முதலீடுகளை தேடி செல்கிறார்கள். இந்த நிலையில் பாரத ஸ்டேட் வங்கி எஸ்பிஐ ஆண்டு தொகை டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது. இந்த திட்டத்தில் முதலீடு செய்வதால் நிலையான வருமானத்தை தொடர்ந்து பெற முடிகிறது. அதாவது முதலீட்டின் தொடக்கத்தில் ஒரு பெரிய தொகையை மொத்தமாக டெபாசிட் செய்து விடவேண்டும்.

மேலும் இந்த தொகையுடன் வட்டி சேர்த்து மாதம் தோறும் உங்களுக்கு தவணைத் தொகையை எஸ்பிஐ செலுத்துகிறது. இதன் மூலமாக மாதம்தோறும் நிலையான வருமானத்தை பெற முடியும். மேலும் உங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் நீங்கள் டெபாசிட் செய்த அசல் தொகை வட்டி 2 இருக்கும். 3 வருடம்,  5 வருடம் , 7 ஆண்டு, 10 வருடம் என உங்கள் விருப்பம் போல் முதலீடு செய்து கொள்ளலாம்.

  • ஃபிக்சட் டெபாசிட்டுக்கு கிடைக்கும் அதே வட்டி விகிதம் எஸ்பிஐ ஆண்டுத் தொகை திட்டத்துக்கும் வழங்குகிறது எஸ்பிஐ வங்கி. அதாவது 5.45% முதல் 5.5% வரை வழங்கப்படும்.
    • சீனியர் சிட்டிசன்களுக்கு 5.95% முதல் 6.30% வரை வட்டி வழங்கப்படும். எனவே, மாத வருமானத் திட்டங்களை தேடும் சீனியர் சிட்டிசன்களுக்கு இதுவொரு சூப்பர் திட்டம்.
    • டெபாசிட் தொகையில் 75% வரை கடனாக பெற்றுக்கொள்ளலாம். கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கு மட்டுமே கடன் வசதி உண்டு.
    • குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். அதிகபட்ச முதலீடுக்கு வரம்பு இல்லை.

Categories

Tech |