Categories
மாநில செய்திகள்

“10,12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு”….. வெளியான புதியஅறிவிப்பு…..!!!!

10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று தமிழகம் முழுவதும் பொது தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கு வரும் 24-ஆம் தேதி முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது.

மேலும் தேர்வு எழுதிய பள்ளி வாயிலாகவோ அல்லது www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவும் மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என்றும், மறுகூட்டலுக்கு நாளை முதல் வரும் 29ஆம் தேதி வரை மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் எனவும் அரசு தேர்வுகள் இயக்கம் அறிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது பள்ளிகளுக்கு சென்று தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வரும் 24ஆம் தேதி பெற்றுக் கொள்ளுங்கள்.

Categories

Tech |