இலங்கையின் தற்போதைய அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவிக்கு வந்தபோது அவருக்கு மட்டற்ற அதிகாரங்களை வழங்க வகை செய்யும் அரசியல் சாசன திருத்த மசோதா 20 ஏ நிறைவேற்றப்பட்டது. இலங்கையில் தற்போது பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதற்கு அதிபர் கோத்தபய ராஜபக்ஷே குடும்பம் தான் காரணம் என்று ஸ்டோரி பதவி விலகக் கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதில் நெருக்கடி முற்றிய நிலையில் மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். இதனையடுத்து புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரம சிங்கே பதவியேற்றார்.
அதனை தொடர்ந்து இலங்கையில் அதிபரின் மட்டற்ற அதிகாரங்களை பறித்து, நாடாளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்க அரசியல் சாசனத்தின் 21வது திருத்தம் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 21வது சட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று அமைச்சர் ஒருவர் தெரிவித்தார். 21 வது சட்டத்தின்படி அதிபர், அமைச்சரவை பாராளுமன்றத்திற்கு பொறுப்பாவார். அதுமட்டுமில்லாமல் தேசிய கவுன்சில் மற்றும் மேற்பார்வை குழுக்கள் பாராளுமன்றத்திற்கு பொறுப்பவார்கள். மேலும் 21 ஏ சட்டத்திருத்தத்தின் மூலம் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.