Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

குட்டையில் மூழ்கிய சைக்கிள்…. மீட்க சென்ற தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

குட்டையில் மூழ்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மகாராஜபுரத்தில் வீரமணி(40) என்பவர் வசித்து வந்துள்ளார்.இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் வீரமணியின் பக்கத்து வீட்டில் வசிக்கும் சிறுவன் குன்னவயல் பகுதியில் இருக்கும் கல்குவாரி குளத்தில் சைக்கிளை கழுவுவதற்காக கொண்டு சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக சைக்கிள் கல்குவாரி குட்டையில் மூழ்கியது. இதுகுறித்து சிறுவன் வீரமணியிடம் தெரிவித்துள்ளார். இதனால் மறுநாள் காலை சைக்கிளை மீட்டுத் தருவதாக வீரமணி தெரிவித்துள்ளார். அதன்படி சிறுவனும், வீரமணியும் கல்குவாரி குட்டைக்கு சென்றனர்.

அப்போது சைக்கிளை தேடுவதற்காக தண்ணீருக்குள் மூழ்கிய வீரமணி நீண்ட நேரம் ஆகியும் வெளிவரவில்லை. இதுகுறித்து சிறுவன் அக்கம்பக்கத்தினரிடம் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு வீரமணியின் சடலத்தை மீட்டனர். பின்னர் வீரமணியின் உடல் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |