Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

வேலைக்கு சென்ற பெற்றோர்…. இளம்பெண் எடுத்த விபரீத முடிவு…. போலீஸ் விசாரணை…!!

இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்திலுள்ள திருவெள்ளறை நேதாஜி நகரில் குமரன்-கோமதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு காயத்ரி என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் முதுகலை பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்ட காயத்ரி தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை அடுத்து வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த பெற்றோர் தங்களது மகள் தூக்கில் சடலமாக தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற இளம் பெண்ணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |