Categories
உலக செய்திகள்

இசை நிகழ்ச்சியில்…. திடீர் துப்பாக்கிச்சூடு…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுவன்  உயிரிழந்துள்ளார். 

அமெரிக்கா நாட்டின் தலைநகரான  வாஷிங்டன் டி.சி.யில் நேற்று முன்தினம் இசைக்கச்சேரி  நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சிறுவர்கள், இளைஞர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கனோர் கலந்து கொண்டு இசைக்கச்சேரியை கண்டு களித்துக்கொண்டிருந்தனர். அப்போது கூட்டத்தில் இருந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென துப்பாக்கியால் சுடத்தொடங்கியுள்ளார்.

இதனால் பீதியடைந்த மக்கள் நாலாபுறமும் சிதறி அடித்து ஓடினர். ஆனாலும் அந்த நபர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்தால் 15 வயதுடைய சிறுவன்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் துப்பாக்கிசூட்டில் காவல்துறை அதிகாரி உள்பட 7 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |