ஜோதிடர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள சின்னமூப்பன்பட்டியில் ஜோதிடரான கடற்கரை(49) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு காளியம்மாள்(46) என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கடற்கரையை அவரது மனைவி கண்டித்துள்ளார். இதனை அடுத்து மது குடிப்பதற்கு பணம் கேட்டு கடற்கரை தனது மனைவியை தொந்தரவு செய்துள்ளார். அப்போது காளியம்மாள் பணம் கொடுக்க மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த கடற்கரை தனது மனைவி கோவிலுக்கு சென்ற நேரத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார்.
இதனையடுத்து கோவிலுக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்த காளியம்மாள் தனது கணவர் மயங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தஅடைந்தார். பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கடற்கரை பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.