சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டியை கண்டு கழிப்பதற்காக 3 மாணவர்களை தேர்வு செய்யும் போட்டி ஈரோட்டில் நடைபெற்றது.
ஜூலை 28-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியானது சென்னை அருகே இருக்கும் மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இது முதல் முதலாக இந்தியாவில் நடைபெற இருக்கின்றது. இந்த போட்டியில் சுமார் 189 நாடுகளைச் சேர்ந்த வீரர்,வீராங்கனைகள் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.
இந்த போட்டியை காண்பதற்கு ஒரு வாய்ப்பாக ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா மூன்று பேர் தேர்வு செய்யப்படுவார்கள். இதன் விளைவாக ஈரோடு மாவட்டத்தில் செஸ் தேர்வு போட்டியானது நேற்று ரங்கம்பாளையத்தில் உள்ள கொங்கு கல்வி நிலைய பள்ளி வளாகத்தில் நடந்தது. இந்தப் போட்டியில் 150க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். இந்தப் போட்டியானது இன்றும் நடந்தது. இதில் வெற்றி பெற்ற மூன்று மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு சென்னையில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியை கண்டுபிடிப்பதற்காக இந்திய சதுரங்க கழகம் ஏற்பாடு செய்திருக்கின்றது.