Categories
தேசிய செய்திகள்

இளைஞர்களே….! “போராட்டம் செய்தால் ராணுவத்தில் இடமில்லை”….. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வருகின்றன. பல மாநிலங்களில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.  இந்நிலையில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு இராணுவத்தில் இடமில்லை என்று இராணுவ விவகாரங்கள் துறை அறிவித்துள்ளது.

வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களை சேதப்படுத்துபவர்கள் ராணுவத்தில் சேர இயலாது. நாசவேலையில் எதுவும் ஈடுபடவில்லை என காவல்துறை சான்று பெற்றுத் தந்தால் தான் ராணுவத்தில் சேர முடியும். ஒவ்வொரு விண்ணப்பமும் காவல்துறை மூலம் சரிபார்க்கப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் இளைஞர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அமைதி காக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

Categories

Tech |