Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் திமுக ஆட்சி பெண்களுக்கான ஆட்சி…. அமைச்சர் அன்பில் மகேஷ் பெருமிதம்…..!!!!

பெண்கள், மாணவர்கள், விவசாயிகள் போன்றோரின் முன்னேற்றத்திற்கான பல திட்டங்களை தமிழ்நாடு முதல்வர் உருவாக்கி கொண்டிருக்கிறார் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பெருமிதம் தெரிவித்து இருக்கிறார்.

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள துவரங்குறிச்சியில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 99-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் பேருந்து நிலையம் அருகில் நடந்தது. இந்த விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று சிறப்புறையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது “திராவிட முன்னேற்றக்கழகத்தை பொறுத்தவரை நான் இந்த இயக்கத்தில் தொண்டன் என்ற உணர்வு, பெருமையைப் பெற்றிருக்கின்ற இயக்கம் ஆகும்.

வாழ்ந்தகாலம் வரை இம்மியளவும் தான்கொண்ட கொள்கையிலிருந்து பிசகாமல் வாழ்ந்த தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைத் தான் நம் மாவட்டம் மட்டுமல்லாது தமிழகம் முழுதுமே பட்டி தொட்டியெல்லாம் அவரது புகழை பறைசாற்றும் வகையில் இன்று நடத்திக்கொண்டு இருக்கின்றோம்.

கலைஞர் எனும் 4 எழுத்துதான் இன்றைக்கு நம்முடைய தலை எழுத்தாக வாழ வைக்கிற எழுத்தாக இருந்து கொண்டு இருக்கிறது என சொன்னால் அது மிகையாகாது. இந்த ஆட்சி என்பது பெண்களுக்கான ஆட்சி தான். அதனை தொடர்ந்து பெண்கள் முன்னேற்றம், மாணவர்கள் முன்னேற்றம் விவசாயிகளுக்கு தோழனாக இருக்கக்கூடிய பல்வேறு திட்டங்களை உருவாக்கி கொண்டிருப்பவர் நம் முதல்வர் ஸ்டாலின். இந்தியாவிலேயே விவசாயத்துக்கு என தனிநிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தது தி.மு.க ஆட்சி தான் என்பதை நாம் பெருமையாக கருதவேண்டும்” என அவர் பேசினார்.

Categories

Tech |