Categories
நாகப்பட்டினம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் முதன்முறையாக வீடுகளுக்கு…. குழாய் மூலம் சமையல் எரிவாயு…. இங்கே தொடங்கியாச்சு…!!!….!!!!!

தமிழகத்தில் முதன்முறையாக குழாய் மூலமாக வீடுகளுக்கு சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை நாகை மாவட்டத்தில் அமல்படுத்தப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் உள்ள சீயாத்தமங்கை என்ற கிராமத்தில் 14 வீடுகளில் குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் திட்டத்தை அம்மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தொடங்கி வைத்தார். தனியார் நிறுவனத்தின் சார்பாக இந்த விநியோகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மின்சாரம் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைப்பது போன்று எரிவாயு குழாய்கள் அமைக்கப்பட்டு சமையலறைக்கு நேரடியாக எரிவாயு குழாய்கள் கொண்டு செல்லப்படுகிறது. எரிவாயு பயன்பாட்டை கணக்கிடுவதற்கு ஒவ்வொரு வீட்டிலும் மீட்டர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை எரிவாயு பயன்பாட்டை பொறுத்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |