Categories
தேசிய செய்திகள்

பல் வலிக்கு சிகிச்சை பெற்ற நடிகை…. பின்னர் நடந்த விபரீதம்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

பெங்களூரு ஜே.பி. நகரில் சுவாதி என்ற நடிகை வசித்து வருகிறார். இவர் கன்னடத்தில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் கடந்த 20 நாட்களுக்கு முன் சுவாதிக்கு பல் வலி ஏற்பட்டு உள்ளது. இதனையடுத்து அவர் சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர் மருந்துக்குப் பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது.

அதன்படி அந்த ஊசியை செலுத்தி உள்ளார். பிறகு சுவாதி முகம் நன்றாக வீங்கி முகத்தின் அமைப்பு மாறி உள்ளது. இதனால் அவர் கடந்த 20 நாட்களாக வெளியே வரவில்லை. மேலும் தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரை தொடர்பு கொண்டு கேட்டபோது, முக வீக்கம் விரைவில் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முகவீக்கம் சரியாகவில்லை. மேலும் டாக்டரை தொடர்பு கொண்டு கேட்டாலும் சரியாகப் பதில் சொல்வது இல்லை என்று சுவாதி குற்றசாட்டு கூறியுள்ளார்.

Categories

Tech |