Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

முன்னாள் ராணுவ வீரருக்கு….. ரூபாய் 5 லட்சம் வழங்கிய தேசிய வங்கி…. எதற்காக தெரியுமா….?

முன்னறிவிப்பின்றி பணம் பிடித்தம் செய்த வங்கிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

திருவாரூரில் உள்ள ஈவிஎஸ் நகரில் பாலாஜி என்பவர் வசித்து வருகிறார். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரராவார். இவர் தனக்கு வரும் பென்சன் தொகையை வைத்து குடும்பத்தை நடத்தி வந்துள்ளார். இவர் கடந்த 2017-ஆம் ஆண்டு தன்னுடைய மகளின் கல்வி செலவிற்காக  ஒரு தேசிய வங்கியில் கல்விக் கடன் வாங்கியுள்ளார். இவர் வாங்கிய கடனுக்கான தவணைத் தொகை கடந்த 2018-ஆம் ஆண்டிலிருந்து தொடங்கியுள்ளது. இந்நிலையில் பாலாஜியின் வங்கி கணக்கில் இருந்து எந்த ஒரு முன்னறிவிப்பும் இல்லாமல் ரூபாய் 23 ஆயிரம் பணம் பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாலாஜி கடந்த 2019-ம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் கொடுத்தார். இதை விசாரித்த ஆணைய தலைவர் தேசிய வங்கி எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி பணத்தை பிடித்தம் செய்ததால் பாலாஜியின் குடும்பத்தினர் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர் என்றார். இதனால் பணம் பிடித்தம் செய்யப்பட்ட நாளிலிருந்து 9 சதவீதம் வட்டியோடு ரூபாய் 5 லட்சத்தை பாலாஜிக்கு வழங்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டார்.

Categories

Tech |