Categories
உலக செய்திகள்

புதிய விமான நிலையம் அமைக்கும் சீனா…. தைவான் மீது போர் நடவடிக்கையா?… எழுந்துள்ள சர்ச்சை…!!!

சீன நாட்டின் ஜின்ஜியாங் மாகாணத்தில் கட்டப்படும் விமான நிலையம், தைவானில் போர் தொடுப்பதற்காக தான் என்று பிரபல இதழில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

சீன அரசாங்கம் ஜின்ஜியாங் மாகாணத்தில் புதிதாக ஒரு விமான நிலையத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. இந்த விமான நிலையமானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 3258 மீட்டர் உயரத்தில் அமைக்கப்படுகிறது. இது தான் நாட்டிலேயே அதிக உயரம் கொண்ட விமான நிலையம் என்று கூறப்பட்டிருக்கிறது.

மேலும், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர், தஜிகிஸ்தான் போன்ற நாடுகளின் எல்லைப்பகுதிகளுக்கு அருகே இந்த விமான நிலையம் இருக்கிறது. இந்நிலையில், சீன நாட்டின் பிரபல இதழ் ஒன்று, பாதுகாப்பு நடவடிக்கை என்னும் பெயரில் தைவான் நாட்டின் மீது போர் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்தான் இந்த விமான நிலையம் கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |