ரஷியாவிடமிருந்து பிரான்ஸ் குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு 4 மாதங்களாக தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கிறது. இந்த போருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த பிரான்ஸ், ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் பெரும்பாலான எரிபொருளுக்கு ரஷியாவையே நம்பி இருக்க வேண்டியதாக உள்ளது.
ஆனால் இந்த ஆண்டுக்குள் ரஷியாவிடமிருந்து பெறப்படும் எரிபொருள் இறக்குமதி முற்றிலுமாக குறைக்கப்படும் என ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்துள்ளது. இப்பொழுது பிரான்சிடமிருந்து வந்த தகவல் மேற்கத்திய நாடுகளில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் ரூ.7200 கோடி மதிப்பிலான எரிபொருட்களை பிரான்ஸ் இறக்குமதி செய்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் உக்ரைனை பிரான்ஸ் ஏமாற்றிவிட்டது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும், பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்து போன்ற நாடுகளும் ரஷியாவிடமிருந்து குறைந்த விலையில் எரிபொருள் இறக்குமதி செய்வதை அதிகரித்துள்ளதாக தெரிகின்றது.