Categories
உலக செய்திகள்

சூடானின் தெற்குப்பகுதிக்கு நிறுத்தப்பட்ட உணவு நிவாரணம்…. 17 லட்சம் பேர் பாதிப்பு…!!!

சூடானின் தெற்கு பகுதியில் ஐ.நா வழங்கிக்கொண்டிருக்கும் உணவு பொருட்கள் நிறுத்தப்படும் பட்சத்தில் 17 லட்சம் பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

சூடான் என்னும் ஆப்பிரிக்க நாடு பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியிருக்கிறது. சூடானின் தெற்கு பகுதியில் அகதிகளும், பிற நாடுகளிலிருந்து வந்து குடியேறி இருக்கும் மக்களும் இருக்கிறார்கள். அங்கு வசிக்கும் மக்களுக்கு ஐ.நாவின் உணவு நிவாரண பிரிவு தான் உணவு வழங்கி கொண்டிருக்கிறது.

இந்நிலையில், உக்ரைன் போர் காரணமாக ஏற்பட்ட பொருளாதார பிரச்சினையால், அப்பகுதிக்கு கொடுக்கப்பட்ட உணவு நிவாரணம் நிறுத்தப்படுகிறது என்று ஐநா உணவு நிவாரண பிரிவு கூறியிருக்கிறது. எனவே அங்கு வசிக்கும் 17 லட்சம் பேர் உணவு தட்டுப்பாட்டால் பாதிப்படைவார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |