Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மஞ்சூர் – கோவை சாலையில் விழுந்து கிடக்கும் கற்கள்…. விபத்து ஏற்படும் அபாயம்…. வாகன ஓட்டிகள் கோரிக்கை…!!!!!!!!!

நீலகிரி மாவட்டத்தில் இருந்து கோவைக்கு செல்லும் குன்னூர் பர்லியார் வழியாகவும் கோத்தகிரி வழியாகவும் மஞ்சூர் கெத்தை வழியாகவும் 3 வழித்தடங்கள் இருக்கின்றது. பருவமழை காலங்களில் குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் ஆங்காங்கே பாறைகள் உருண்டு விழுவதும் மரங்கள் வேரோடு சாய்ந்து விழுவது போன்ற பேரிடர்கள் ஏற்படுகின்றது. இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப் படுகின்றது. அந்த நேரங்களில் கோத்தகிரி வழியாக போக்குவரத்து திருப்பி விடப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பயணிகள் கடுமையாக அவதியடைந்து வந்துள்ளனர். மேலும் பலத்த மழை பெய்யும் போது கோத்தகிரி மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டால் கோவைக்குச் செல்லும் மூன்றாவது மாற்றுப்பாதை இன்றியமையாதது.

இதனால் கோவை மஞ்சூர் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த கோடை மழையின் காரணத்தினால் சாலையில் கற்கள் விழுந்து கிடைக்கின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது எதிரே வரும் வாகனங்களுக்கு வழிவிட சிரமமாக இருக்கின்றது.  சாலையோரம் கிடக்கும் கற்கள் பாறைகளால் விபத்து ஏற்படும் அபாயம் இருக்கின்றது. இது பற்றி வாகன ஓட்டிகள் கூறியதாவது மைசூரிலிருந்து மெத்தை, முள்ளி, வெள்ளியங்காடு, காரமடை வழியாக கோவைக்கு தினமும் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் சென்று வருகிறது. 55 கிலோமீட்டர் தொலை தூர சாலை 7 மீட்டர் அகலப்படுத்த பட்டதால் கோவைக்கு இரண்டரை மணி நேரத்தில் செல்ல முடிகின்றது.

இதற்கிடையே தொடர் மழையின் காரணமாக கற்கள் உருண்டு விழுந்து சாலையில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் விழுந்து கிடைக்கின்றது. இதனால் எதிரே வரும் வாகனங்களுக்கு வழி விடும் போது விபத்தில் சிக்கும் அபாயம் இருக்கின்றது. மேலும் சாலையின் இருபுறங்களிலும் செடி கொடிகள் வளர்ந்து புதர்கள் ஆக்கிரமித்து காணப்படுகின்றது. அதனால் சாலையில் உள்ள கற்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையும் முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |