அமெரிக்காவில் ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தில் சுகாதார மற்றும் மனித சேவைகள் மந்திரியாக இருந்து வருபவர் சேவியர். இவருக்கு 64 வயது. இவர் கடந்த மாதம் மத்தியில் ஜெர்மனிக்கு சென்று திரும்பிய நிலையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் போஸ்டர் உள்ளிட்ட 3 போஸ்டுகளை செலுத்திக் கொண்டும் வைரஸ் தாக்கியுள்ளது.
அதனை தொடர்ந்து தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டார். அதன்பிறகு தொற்று பாதிப்பிலிருந்து மீண்டும் வந்து பணிக்கு திரும்பினார். இந்நிலையில் தற்போது சேவியர் பெசெராவுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று காலை பரிசோதனை செய்தபோது தொற்று பாதிப்பு உறுதியாகி, லேசான அறிகுறி இருப்பதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.