தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாதிரிப் பள்ளிகளில் இனி மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே 9-12ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி பத்தாம் வகுப்பில் சேர்க்கப்படும் மாணவர் ஒன்பதாம் வகுப்பில் தேசிய அளவில் நடத்தப்படுகின்ற ஊரக திறனாய்வு தேர்வு எனப்படும் trust தேர்வு மதிப்பெண் மற்றும் பள்ளி அளவில் நடத்தப்பட்ட தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள், 9 ஆம் வகுப்பு சேர்க்கைக்கு எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய வருவாய்வழி திறன் தேர்வில் பெற்ற மதிப்பெண் மற்றும் பள்ளி அளவில் பெற்ற மதிப்பெண்கள், 11ஆம் வகுப்பு மாணவர் சேர்க்கைக்கு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு மதிப்பெண், பொதுத்தேர்வு மதிப்பெண்களும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு மாணவர்கள் தகுதியின் அடிப்படையில் சேர்க்கப்பட உள்ளனர்.
மேலும் அரசு பள்ளிகளில் நன்றாக பயிலும் மாணவர்களுக்கு ஒன்பதாம் வகுப்பு முதலே சிறப்பு கவனம் செலுத்துவது மற்றும் சிறப்பு பயிற்சி அளிப்பது போன்றவற்றின் மூலமாக தேசிய அளவிலான கல்வி நிறுவனங்கள் உட்பட தமிழகத்தின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் உயர் கல்வி பயில வழிவகை செய்வதற்கு இந்த புதிய நடைமுறை பின்பற்ற உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தரப்பில் கூறப்படுகிறது.