நயன்தாரா அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக கேரளாவிற்கு சென்றுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஏழு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் சென்ற ஜூன் 9-ஆம் தேதி காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
இவர்களின் திருமணமானது பலத்த போலீஸ் பாதுகாப்பில் நடைபெற்றது. திருமண நிகழ்ச்சிகளில் திரைப்பட பிரபலங்களான சாருக்கான், ரஜினிகாந்த், மணிரத்னம், கார்த்தி, போனி கபூர், ராதிகா சரத்குமார், இயக்குனர் விஜய், அட்லீ என பலர் கலந்து கொண்டார்கள். திருமணத்தின்போது நயன்தாராவுக்கு விக்னேஷ் சிவன் பல கோடி மதிப்புள்ள நகைகளை பரிசாக வழங்கியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் விக்கியும் நயனும் நேற்று முன்தினம் கேரளாவிற்கு சென்று இருக்கின்றனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இருவரும் நயனின் அம்மாவிடம் ஆசீர்வாதம் வாங்க சென்றதாக கூறப்பட்டது.. முன்னதாக நயன்தாராவின் அம்மாவிற்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு இருப்பதால் மகளின் திருமணத்தில் பங்கேற்க முடியவில்லை. ஆகையால் திருமணம் முடிந்த கையோடு ஆசீர்வாதம் வாங்க நயன்-விக்கி கேரளா சென்றிருக்கின்றனர்.